Author: vettaiperumal
•4:50 AM
மயக்கம் தெளிய ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. என்ன செய்வது கையிருப்பது வெளிநாட்டுக் குழந்தைகளாயிற்றே.....?
ராமச்சந்திரனைச் ‘செவுலோட சேர்த்து வச்சு நாலு சாத்து சாத்தலாம்’ என்று ஆத்திரம் வந்தாலும், ஜானிவாக்கரும், க்ளென்ஃபிடிச்சும் என் கைகளைக் கட்டிப்போட்டிருந்தன. ‘போறான் போ’ என்று பொறுத்துக்கொண்டு ‘இப்ப என்ன தான் சொல்ற?’ என்றேன்.
‘இல்ல மாப்ளே.... என் கழுத்தை நெரிக்கிற அளவுக்கு செட்டியூல் பயங்கர டைட்டா இருக்கு’ என்று தன் இரு கைகளையும் கழுத்துக்கு நேரே வைத்து நெரித்துக்காட்டினான். எனக்கு உண்மையிலேயே அவன் கழுத்தை நெரிக்க வேண்டும் போலிருந்தது. வந்த கடுப்பையெல்லாம் மென்று விழுங்கிக்கொண்டேன்.
‘எனக்கென்ன மயிரு.... நாளைக்கு வந்தா வா... இல்ல எக்கேடுகெட்டு ஒழி..’ என்றேன் எரிச்சலாக.
கடுமையான யோசனைக்கு ஆளானான் ராமச்சந்திரன். உதட்டைக் கடித்தபடி தனக்குத் தானே ‘எஸ்..எஸ்....எஸ்....எஸ்’ என்று தலையாட்டிக் கொண்டான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, ’ஓகே....ஓகே.....சரி மாப்ளே... நாளைக்கு முணு மணிக்கு எப்படியாவது வந்துடுறேன்’ என்று தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி இயக்குநர், இசையமைப்பாளர், மற்றும் எனக்கும் பெருங்கருணைகாட்டினான். அடுத்ததாக நான், ‘அய்யா’ மனமிறங்கிக் கருணை மழை பொழிந்த அற்புதத்தை இயக்குநருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கலக்கமாக இருந்தது. இருந்தாலும் புலி வாலைப் பிடித்த பிறகு விடமுடியுமா? எக்மோர் ஸ்டேஷன் வாசலில் நின்றபடியே மறுபடியும் இயக்குநரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். சற்று நேரம் மௌனம் காத்தார். எனக்கு படபடப்பாக வந்தது. ‘வக்காள ஓலிகளா? என்ன விளையாடுறீங்களா....?’ என்று அவர் பதிலுக்கு கேட்பது தான் நியாயம். ஆனால் அவர் அநியாயத்திற்கு நல்லவராக இருந்தார். ‘அப்படியா.... ? எனக்கு ஒண்ணுமில்ல... நாம சொல்ற டயத்துக்கு மியூசிக் டைரக்டர் வரணும். அதுதான் பிரச்னை. பரவாயில்ல விடுங்க... நான் நாளைக்கு அவர எப்படியாவது வரச்சொல்லிடுறேன். நீங்க மூணு மணிக்கு உங்க ஃபிரண்டோட வந்துடுங்க’ என்றார்.
அடுத்ததாக நாளைக்கு என்ன பாடலைப் பாடிக்காட்டுவது, இயக்குநரிடம் என்ன பேசுவது,,, என்ன பேசக்கூடாது என்பதையெல்லாம் விவாதிக்க(மிரட்டி வைக்க) கண்ணகி சிலை பக்கம் நானும் ராமச்சந்திரனும் ஒதுங்கினோம். வாகாக ஒரு இடத்தை தேர்வு செய்து பீச் மணலில் அமர்ந்துகொண்டோம். ‘என்ன பாடுவது.... சினிமா பாட்டா.... ? இல்ல ஏதாவது வெயிட்டான கீர்த்தணையா....? சினிமா பாட்டுனா மெலோடியா.... இல்ல கிளாஸிக்கலா....? என ஒரு மணிநேரத்திற்கு மேல் குழம்பித் தீர்த்தோம். ராமச்சந்திரன் பயங்கர டென்சனில் இருந்தான். ‘நான் பாடியே பல வருஷம் ஆச்சுடா... நீ அங்கே என்னென்னத்த சொல்லி வச்சிருக்கியோ....?’ என்று பயந்தான். ‘சரி எதையாவது பாடு எல்லாம் சரியாயிடும்’ என்று உற்சாகப்படுத்தினேன். எங்களுக்கு எதிரே அரை இருட்டில் ஒரு ஜோடி வாயோடு வாய் வைத்து எதையோ பேசி(?)க்கொண்டிருந்தது. ராமச்சந்திரன் தொண்டையைக் கணைத்துக் கொண்டு எடுத்துவிட்டான் ஒரு பாட்டை. ‘ஆஆஆ.........ஆஆஆஆஆஆஆ...... ஆஆஆஆஆஆஆஆஆஆ..... .’ கரகரப்பிரியா ராகத்தில் எட்டூருக்குக் கேட்டும் குரலில் ஆலபானை செய்யத் தொடங்கினான். (வாயோடு) வாய் போட்டுக்கொண்டிருந்த ஜோடி திடுக்கிட்டு எங்களை வெறியோடு திரும்பிப் பார்த்தது. நான், ‘எழுந்து ஓடிவிடலாமா’ என்று யோசித்தேன். ஆனால் நண்பன் கண்களை மூடிக்கொண்டு இசைவெள்ளத்தில் ‘தொபுக்கட்டீர்ணு’ குதித்து நீந்திக்கொண்டிருந்தான். ஏகாந்தமான கடற்கரைக் காற்று... நெக்குருக வைக்கும் ராமச்சந்திரனின் பாட்டு... தடவ முடியாமல் திருட்டு முழி முழிக்கும் காமாந்தக் காதலர்கள்... எந்த நேரத்திலும் காலோடு கையோடு பேதியாகும் நிலையில் நான்... அடடா என்ன வொண்டர்ஃபுல் காம்பினேஷன்?
ராமச்சந்திரன் போட்ட சத்தத்தில்(அடப் பாட்டுதாங்க) அந்த இடத்தில் ஊரே கூடிவிடும் நிலை. நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட வாய்க் காதலர்கள் எடுத்தார்கள் பாருங்கள் ஓட்டம். எனக்கு அப்போது தான் ‘அப்பாட...’ என்றிருந்தது. பாட்டு மணிக்கணக்காகத் தொடர்ந்தது. அவன் பாட ஆரம்பித்துவிட்டால் எனக்கு சலிக்காது. தொண்டை கட்டும் வரை விடமாட்டேன். கடைசியில் நாட்டை ராகத்தில் ஒரு கீர்த்தணையும், மோகமுள் படத்தில் வரும் ‘கமலம் பாதக் கமலம்’ பாடலையும் மியூசிக் டைரக்டருக்குப் பாடிக் காட்டுவது என்று முடிவானது. இறுதில் முக்கியமான கட்டத்திற்கு வந்தேன். நாளை இயக்குநரைச் சந்திக்கும் போது பாட்டுப்பாடுவதற்கு மட்டும் தான் ராமச்சந்திரன் வாய் திறக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டேன். மறுப்பேதும் சொல்லாமல் நல்லபிள்ளைபோல் ‘நான் வாயே திறக்கலபோதுமாட..?’ என்றான்.
‘தாராளமா வாயத் திற... ஆனா படறதுக்கு மட்டும்’ என்றேன் நான்.
‘நாளை’ என்ன நடந்தது என்பதை நாளை எழுதுகிறேன்....

|
This entry was posted on 4:50 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On July 19, 2010 at 9:43 AM , Guna said...

nice guru....

so oru free kiss scene parthirukeenga... ha ha ha

but neenga adicha avarau thaanguvara nu theriyala.. neenga manly ya irukeenga vera..

 
On July 19, 2010 at 9:45 AM , Guna said...

and unga friend oru kissing lover ah pirichitar???

paavam avanga enna pannuvanga.. poonga guru...

manasu valikudhu...

 
On July 19, 2010 at 9:32 PM , vettaiperumal said...

அடங்கொய்யால... இப்படி வேற கிளம்பியிருக்கீங்களா?